பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் தமிழ் ஆசிரியர் பணடிதர் பரந்தாமான் இன்று காலமானார்.
"மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்....." போன்ற பல எழுச்சிப் பாடல்களை இவர் எழுதியுள்ளார்.
இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனரும் ஆவார்.
“தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” , “கெரில்லாப் போர் விரகுகள்”, “மனிதரும் கடவுளும்”, “வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி” என்று பல நூல்களை எழுதித் தமிழினத்துக்காகவும், தமிழ்மொழிக்காகவும், விடுதலைக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்து தொண்டாற்றியவர் ஆவார்.
பருத்தித்துறை புலோலி- புற்றளையில் தன் இறுதிக் காலத்தில் வசித்துவந்த நிலையில் முதுமை காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.